
மதுரை: சிறுதானிய உணவுகளைப் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் லட்டு, புட்டு, சூப் என பல்வேறு வகையான உணவு வகைகளைத் தயாரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்த தொழில்முனைவோரான சரோஜினி (46). இது குறித்து சிறுதானிய உணவு வகை தயாரிப்பாளரும், பயிற்சியாளருமான சரோஜினி கூறியதாவது: தனியார் பள்ளியில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, பேப்பர் கிராப்ட் மற்றும் எழுத்துப் பயிற்சி ஆகியவற்றை கடந்த 12 ஆண்டுகளாக அளித்து வந்தேன். கரோனா காலத்தில் வேலையின்றி இருந்ததால், மாற்றுத் தொழில் செய்ய முயற்சித்தேன். அப்போது, ஆன்லைன் மூலம் சிறுதானியப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சியைக் கற்றேன்.
சிறுதானிய உணவு வகைகளை, உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த எனது தம்பிக்கும், அவரது மகளுக்கும் கொடுத்தேன். சிறுதானிய உணவுப் பழக்கத்துக்கு மாறியதால் அவர்களது உடல்நிலை சீரானது. பின்னர், வருமானத்துக்காக சிறுதானியங்களில் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யத் தொடங்கினேன். பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று சிறுதானிய உணவுகளைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். மழலையர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள்சத்தான உணவை உண்டு பள்ளிக்குச் செல்ல சிறுதானிய உணவுகளை வித விதமாகத் தயாரித்து வழங்குகிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment