
சென்னை: தெற்கு ரயில்வேயில் நடப்பு நிதியாண்டில் நவம்பர் வரை 8 மாதங்களில் சரக்கு போக்குவரத்து மூலமாக, ரூ.2,319 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில்களில் 26.08 மில்லியன் டன் பொருள்களை ஏற்றி அனுப்பியது மூலமாக இந்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்பட 6 கோட்டங்களில் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறுநடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. இதற்காக, தெற்கு ரயில்வேயின் 6ரயில்வே கோட்டங்களில் வணிகமேம்பாட்டு குழு உருவாக்கப்பட்டது. இக்குழுக்கள், சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ள பெரு நிறுவனங்களிடம் தொடர்புகொள்வது, சரக்கு கையாள்வதற்கு புதிய ரயில் நிலையங்களை ஏற்படுத்தல், புதிய நவீன சரக்கு ரயில் உருவாக்குதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இதன்விளைவாக, ரயில்வே சரக்கு போக்குவரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில், சரக்கு போக்குவரத்து பிரிவில் 37.94 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றிச்சென்று சேர்க்கப்பட்டன. இதன்மூலமாக, ரூ.3,637 கோடி வருவாய் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment