
புதுக்கோட்டை: கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதாலும், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மல்லி, முல்லை மற்றும் கனகாம்பரம் ஆகிய பூக்கள் கிலோ ரூ.1,000-க்கும் மேல் விற்பனையாகின.
ஆலங்குடி மற்றும் கறம்பக்குடி வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் மல்லிகை, சம்பங்கி, ரோஜா, காக்கரட்டான், செண்டி, முல்லை, அரும்பு, பிச்சிப்பூ உள்ளிட்ட பூ வகைகளை சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் புதுக்கோட்டை, கீரமங்கலம், மாங்காடு, வடகாடு உள்ளிட்ட இடங்களில் உள்ள மண்டிகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment