
கோவை: கடந்த 5 ஆண்டுகளில் தொழில் முனைவில் மகளிர் பங்களிப்பு 20 சதவீதம் உயர்ந்துள்ளது என கோவையில் நடந்த மகளிருக்கான தேசிய அளவிலான ஸ்டார்ட் - அப் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் பிரிவான பிக்கி லேடீஸ் ஆர்கனைசேஷன் ( எப்எல்ஓ ), கோவையில் ‘ஷீ ரைசஸ்’ என்ற தலைப்பில் மகளிருக்கான தேசிய அளவிலான ஸ்டார்ட் - அப் மாநாட்டை நடத்தியது. மாநாட்டில், 16 வகையான தொழில் பிரிவுகளை சார்ந்த பெண்கள் பங்கேற்று, சவால்களுக்கு இடையே உள்ள வாய்ப்புகள் குறித்து பேசினர். சவுமியா கேசவா முன்னிலை வகித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment