
கிருஷ்ணகிரி: பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சள் கொத்து வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பல இடங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, காட்டிநாயனப் பள்ளி, பூசாரிப்பட்டி பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். 6 மாத பயிரான மஞ்சள் அறுவடைக்குப் பின்னர் வேகவைத்து உலர்த்தப்பட்டு 100 கிலோ மூட்டையாகக் கட்டி, ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விற்பனைக்கு விவசாயி கள் கொண்டு செல்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment