
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் சார்பில் முதன்முறையாக பிரிக்காஸ்ட் கற்களைப் பயன்படுத்தி ரூ.45.5 கோடியில் 216 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் நடக்கிறது. செங்கல்லுக்கு மாற்றாக பயன்படும் இக்கற்கள் 50 ஆண்டுகளுக்கு சேதமாகாது. குறித்த காலத்துக்குள் கட்ட இயலும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் 45 அடி சாலையிலுள்ள குமரகுருபள்ளத்தில் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இக்குடியிருப்பு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கட்டிடம் பழுதடைந்திருந்ததால் அடிக்கடி தளத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தன. இதனால் அங்கு வசித்த மக்கள் அச்சத்தில் இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment