
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உரிகம், உள்ளுகுறுக்கி,பேரிகை,பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான புளியமரங்கள் உள்ளன. இப்பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 20 டன் புளி உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் குறிப்பாக உரிகம் புளி நல்ல மண் வளத்தில் வனப்பகுதி களையொட்டி விளைவதால், அதிக சதைப் பற்றுடன் நீளமாகவும் சுவையாகவும் உள்ளதால், இப்பகுதிகளில் ஆண்டுதோறும் விளையும் புளியை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், கர்நாடக, ஆந்திர மாநில வியாபாரிகளும் வந்து நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். கடந்தாண்டு அதிக மழைப் பொழிவு காரணமாக புளிய மரங்களில் பூக்களில் நோய் தாக்கம் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டதால், புளி சிறுத்து, தரம் இல்லாமல் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment