
புதுடெல்லி: வரிப் பகிர்வின் கூடுதல் தவணையாக ரூ.72,961.21 கோடி நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. புத்தாண்டு, வரவிருக்கும் பண்டிகை நாட்களை கருத்தில்கொண்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை மாநிலங்கள் மேற்கொள்ள ரூ.72,961.21 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
தற்போது மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகை 10 ஜனவரி 2024 அன்று மாநிலங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய வரிப் பகிர்வு ஆகும். 11 டிசம்பர் 2023 அன்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.72,961.21 கோடி வழங்கப்பட்டுவிட்டது. தற்போது மொத்தம் 28 மாநிலங்களுக்கு ரூ.72,961.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், உத்தர பிரதேச மாநிலத்துக்கு அதிகபட்சமாக ரூ.13,088.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment