
கோவை: கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்தில், நிபந்தனைகளுடன் தமிழக அரசு ஒப்படைத்த நிலத்தை பெறுவது தொடர்பாக விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) விரைவில் முடிவு செய்யும் என, விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார். இதற்கிடையே, ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கோவை விமான நிலையத்தில் ஓடுபாதை நீளத்தை அதிகரித்தல், சர்வதேச தர அந்தஸ்துக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 627 ஏக்கரில் விரிவாக்க திட்டம் கடந்த 2010-ல் அறிவிக்கப்பட்டது. பத்தாண்டுகளாக முடங்கி கிடந்த நில ஆர்ஜித பணிகள் திமுக அரசு பொறுப்பேற்ற பின் வேகமெடுத்தது. மொத்தம் 558.87 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு விமான நிலைய ஆணையத்திடம் குத்தகை அடிப்படையில் சில நிபந்தனைகளுடன் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment