
சிவகாசி: தொடர் மழை காரணமாக பட்டாசு ஆலைகள் முழுமையாக இயங்க முடியாததால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விற்பனையாளர்கள் உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.
சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 1,100-க்கும் அதிகமான பட்டாசுஆலைகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 95 சதவீதத்துக்கும் அதிகமான பட்டாசுகள், சிவகாசி பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment