
மும்பை: மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் பிரிட்டனிலிருந்து 100 டன் தங்கத்தை இந்தியா கொண்டு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2024 மார்ச் மாத நிலவரப்படி ரிசர்வ் வங்கி வசம் 822 டன் தங்கம் உள்ளது. இதில் 414 டன் தங்கம் வெளிநாடுகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள்வசமுள்ள தங்கத்தை இங்கிலாந்து வங்கியில் சேமிப்பது பொதுவான நடைமுறையாக உள்ளது. இந்தியாவும் பெரும் அளவிலான தங்கத்தை இங்கிலாந்து வங்கியிலேயே சேமித்து வைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment