
மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ரூ.5.50 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. லாப நோக்கம் கருதி அதிகளவில் பங்குகளை விற்று முதலீட்டாளர்கள் வெளியேறியதையடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்றை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 380 புள்ளிகள் சரிந்து 73,511 புள்ளிகளாகவும், நிஃப்டி 140 புள்ளிகள் குறைந்து 22,302 ஆகவும் நிலைத்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment