
கோவில்பட்டி: தமிழ்நாடு முழுவதும் நகர கூட்டுறவு வங்கியில் புதிய மென்பொருள் மாற்றப்பட்டு, சரிவர அது இயங்காததால் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் 125 நகர கூட்டுறவு வங்கிகளும், இவற்றுக்கு 362 கிளைகளும் உள்ளன. நிரந்தர பணியாளர்கள் சுமார் 4 ஆயிரம் பேர், தற்காலிக பணியாளர்கள் 2 ஆயிரம் பேர் உள்ளனர். ரிசர்வ் வங்கியின் கீழ் நகர கூட்டுறவு வங்கி இருந்தாலும், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பதிவாளர் தலைமையில் இந்த வங்கி இயங்குகிறது. இந்தவங்கிக்கென மாநில அரசு தனியாகநிதி கொடுப்பது இல்லை. வாடிக்கையாளர்களிடம் வைப்புத் தொகை பெற்று, அந்த தொகைகள் மூலம் கடன்கள் வழங்கி, அதன் வழியாக வட்டியை ஈட்டி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment