
கோவில்பட்டி: கோடை மழை நடப்பாண்டில் மானாவாரி விவசாயத்துக்கு கை கொடுக்காததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் வட பகுதி மானாவாரி விவசாய நிலங்களாகவும், தென் பகுதி தாமிரபரணி ஆற்றுப்பாசன நிலங்களாகவும் உள்ளன. வடக்கு பகுதியில் பெரும்பாலும் சிறு தானியங்கள், எண்ணெய் வித்துகள், பணப்பயிர்கள், பயறு வகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பெய்யக் கூடிய பருவ மழைக்கு விதைப்பு பணியை தொடங்கி, தை மாத பிற்பகுதியில் இருந்து ஒவ்வொரு பயிராக அறுவடை செய்யப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே இயற்கை இடர்பாடுகளால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment