
புதுடெல்லி: ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சம் தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வலுவான உள்நாட்டுப் பரிவர்த்தனை மற்றும் இறக்குமதி காரணமாக ஜிஎஸ்டி வசூல் உயர்ந்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. இந்நிலையில், இவ்வாண்டு ஏப்ரலில் 12.4 சதவீதம் உயர்ந்து ரூ.2.10 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment