
கோவை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தினசரி மின் நுகர்வு குறைந்துள்ளது. இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுவதை தவிர்க்க மின் கம்பி, மின் மாற்றிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வரலாற்றில் முதல் முறையாக இவ்வாண்டு தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 454 மில்லியன் யூனிட்டுகளாக உயர்ந்தது. இச்சூழலில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வீடு, அலுவலகங்களில் குளிர் சாதன பெட்டி, மின் விசிறி, ஏர் கூலர் உள்ளிட்ட பல்வேறு மின் சாதன பொருட்களின் பயன்பாடு குறைந்துள்ளதால் தினசரி மின் நுகர்வும் குறைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment