
சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் 2023-24-ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத உச்சபட்ச அளவாக ரூ.39,619 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் இந்நிறுவனம் ஈட்டிய லாபமான ரூ.8,242 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 4 மடங்கு அதிகம்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 60 ஆண்டு கால நீண்ட பயணத்தில் கடந்த நிதியாண்டில் அனைத்து பிரிவிலான வர்த்தகமும் குறிப்பிடத்தக்க அளவிலான சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதன் காரணமாகவே லாபம் இதுவரை இல்லாத அளவாக ரூ.39,619 கோடியாகி உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment