
மதுரை: நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் நிறுவனங்கள், தனி நபர்கள் மீது ஜூனில் நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி, காலி மனை வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி, குத்தகை வரி மற்றும் கடைகள் வாடகை போன்ற பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இதில் தனியார் நிறுவனங்கள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள், மருத்துவ மனைகள் மற்றும் பொதுமக்கள் செலுத்தும் சொத்து வரி தான் மாநகராட்சிக்கு பிரதான வரியாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment