
சென்னை: தமிழகத்தில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்சாதனங்கள், வாகன உதிரி பாகங்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. இந்நிறுவனங்கள் நடைமுறை மூலதன செலவை சமாளிக்கவும், விரிவாக்கத் திட்டங்களுக்கும் வேண்டி வங்கிகளில் கடன் பெறுகின்றன.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட சேவைகளை பெறும் பெரியநிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் குறித்த காலத்துக்குள் பணம் தருவதில்லை. இத்தகைய காரணங்களால் பல தொழில் நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment