
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதியை ஊபர் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் ஊபர் ஷட்டில் மூலமாக இது நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.
அண்மையில் அதற்கான உரிமத்தை டெல்லி போக்குவரத்து துறையிடம் இருந்து ஊபர் நிறுவனம் பெற்றுள்ளது. இது டெல்லியின் ப்ரீமியம் பேருந்து திட்டத்தின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் செயல்பட்டு வரும் வாகன பார்ட்னர்களுடன் சேர்ந்து இந்த ஏசி பேருந்துகளை ஊபர் இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment