
மதுரை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால், ‘ஏசி’ (ஏர் கண்டிஷன்) விற்பனை 100 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், ஏசி இயந்திரம் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு வெப்ப அலை மற்றும் அனல் காற்று அபாய எச்சரிக்கை ( ஆரஞ்ச் அலர்ட் ) விடுக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம், வெப்ப அலை அதிகரித்த வண்ணம் உள்ளதால், பொதுமக்கள் காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என அரசும் அறிவுறுத்தி உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment