
புதுடெல்லி: ஏற்றுமதி மற்றும் இறக்குமதிசெயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் 7 நாடுகளுடன் இந்தியாபரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுடனான ஏற்றுமதி - இறக்குமதி செயல்பாட்டை மேம்படுத்த இந்தியா பல்வேறுமுன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், சட்டவிதிகளுக்கு உட்பட்ட வர்த்தகத்தை உறுதி செய்யவும், ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு ஏதுவான கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் பல நாடுகளுடன் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment