
ஹைதராபாத்: கடந்த வாரம் ஹைதராபாத் நகரில் இயங்கி வரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் காலாவதியான உணவுப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதற்காக உணவகத்தின் உரிமையாளரான ராகவேந்திர ராவ், மன்னிப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசி இருந்த வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது. ‘அவர் மன்னிப்பு கேட்கிறாரா அல்லது மிரட்டுகிறாரா?’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். ஏனெனில், அந்த வீடியோவில் அவரது பாடி லாங்குவேஜ் அப்படி இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment