
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த தொடர் மழையால் மிளகாய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளில் மிளகாய் விலை உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்தது. இந்தக் கோடை மழையால் மாவட்டத்தில் பல இடங்களில் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மட்டுமின்றி பாவூர்சத்திரம், மானூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஒசூர், கொடைக்கானல் உள்ளிட்ட வெளிமாவட்ட பகுதிகளிலும் காய்கறிகள் உற்பத்தி மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலிக்கு காய்கறி வரத்தும் குறைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment