
சென்னை: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (மே 18) காலமானார். அவருக்கு வயது 88.
கடந்த 1936-ல் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராம பகுதியில் பிறந்தவர். அதன் பின்னர் அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. லயோலா கல்லூரியில் பட்டம் முடித்தார். அதன் பின்னர் சிவில் சர்வீசஸ் தேர்வில் ஆர்வம் செலுத்தினார். முதல் முயற்சியில் அது எட்டாத நிலையில் 1955-ல் எஸ்பிஐ வங்கியில் இணைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment