
இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் தேசியப் பால்வள மேம்பாட்டு நிறுவனம் (National Dairy Development Board-எண்டிடிபி) 1965-இல் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் 1940-களின் பிற்பகுதி வரை, ஒருவருக்குச் சராசரியாக ஒரு நாளில் 110-120 கிராம் பால் மட்டுமே கிடைக்கும் அளவுக்குப் பால் உற்பத்தி இருந்தது. இந்நிலையில், தேசியப் பால் வள மேம்பாட்டு நிறுவனம் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கைகள் மூலம் பால் உற்பத்தி அதிகரித்தது. உதாரணமாக, Operation Flood உள்பட வெண்மைப் புரட்சியை ஏற்படுத்திய திட்டங்கள். இந்நடவடிக்கைகளால், ஒருவருக்கு ஒரு நாளைக்கு 300 கிராமுக்கும் அதிகமான அளவில் பால் கிடைக்கும்வகையில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. இன்று உலகிலேயே அதிகளவில் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment