
திருவள்ளூர்: அன்னிய முதலீடும், இணையதள வணிகமும், ஊக வணிகமும் இந்திய பாரம்பரிய சிறு வணிகத்தை முடக்கி விடாமல் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
வணிகர் தினமான நேற்று தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு, திருவள்ளூர் மாவட்டம், வானகரத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசம், தமிழ்நாடு தன்னுரிமை கழகத் தலைவர் பழ.கருப்பையா, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று, வணிகர்களின் பிரச்சினைகள் மற்றும் அதைத் தீர்ப்பதற்கு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment