
ராமேசுவரம்: மீன்பிடித் தடைக்காலத்தைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர் கள் கடலுக்குச் செல்லாததால் தமிழகத்தில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரைக் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 அன்று தொடங்கியது. ஜூன் 14 வரை 61 நாட்கள் தமிழகத்தில் இந்தத் தடை அமலில் இருக்கும். இதனால், தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் கடந்த ஒரு மாதமாக கடலோரம் நங்கூரமிடப்பட்டுள்ளன. மேலும் மீனவர்கள் விசைப் படகுகளில் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டுப் படகு மீனவர்கள் சிறிய படகுகள் மூலம் வழக்கம் போல மீன்பிடித்து வருகின்றனர். ஆனால், இவை போதுமானதாக இல்லை. இதனால் தமிழகத்தின் பிரதான மீன் சந்தைகளில் மீன் களின் விலை வேகமாக உயர்ந் துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment