
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பழைய உணவு வகைகளை விற்பனை செய்ததாக பிரபல பிரியாணி கடையின் உரிமத்தை உணவுப் பாதுகாப்பு துறையினர் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ச.மாரியப்பன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாநகராட்சியில் எட்டயபுரம் சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி கடையில் இன்று திடீர் சோதனை செய்தனர். அப்போது, நேற்று முன்தினம் சமைத்து, விற்பனையாகாமல் மீதமான உணவு பொருட்களை பிரட்ஜில் சேமித்து வைத்திருந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment