
சென்னை: அட்சய திருதியை நாளன்று இந்த ஆண்டும் வழக்கம் போல் நகைக் கடைகளில் விற்பனை களைகட்டியது. இதனால் 24,000 கிலோ தங்கம் விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, நேற்று ஒரேநாளில் 3 முறை தங்கம் விலை உயர்ந்துபவுனுக்கு ரூ.1,240 வரை அதிகரித்தது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற ஐதீகம் மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று காலை 6.33 மணிக்கு தொடங்கி இன்று (11-ம் தேதி) அதிகாலை 4.56 மணி வரை நீடித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment