
தூத்துக்குடி: தாமதமாக தொடங்கிய கோடை மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் உப்பு உற்பத்தி 50 சதவீதம் குறையும் என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதிகனமழையால் உருக்குலைந்து போன உப்பளங்களை சீரமைத்து உப்பு உற்பத்தியைத் தொடங்கும் வேளையில் பெய்த இந்த திடீர் மழையால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி 50 சதவீதம் அளவுக்கு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment