
கிருஷ்ணகிரி: மாம்பழ சீசனை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையோரங்களில் அதிக அளவில் பெண்கள் மாம்பழ கடைகள் நடத்தி வருகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு வருவாய் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் மா விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வரும் நிலையில், நிகழாண்டிலும் மழையின்றி, வெயில் தாக்கம் காரணமாக மகசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மானாவாரியில் 90% பாதிப்பு: குறிப்பாக, மானாவாரி சாகுபடியில் 90 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில், இறவை சாகுபடியில் அறுவடையாகும் மாம்பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment