
சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு நேற்று (மே.10) ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று (மே.11) காலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.6,750-க்கும், ஒரு பவுன் ரூ.160 குறைந்து ரூ.54,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.70 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.90.50-க்கு விற்பனையாகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment