
மும்பை: இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் 1,062 புள்ளிகள் சரிந்து 72,404-ல் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்ணான நிப்டி 345 புள்ளிகள் சரிந்து 21,957-ல் நிலை பெற்றது.
சென்செக்ஸ், நிப்டி ஆகியவை 1.5 சதவீதத்துக்கு மேல் சரிந்தன. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் குறியீட்டெண் 2 சதவீதத்துக்கு மேல் சரிந்தன. இதனால் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.7.6 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment