
புதுடெல்லி: டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் பணியாளர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 300 பேர் உடல்நிலை சரியில்லை எனக்கூறி மொத்தமாக விடுப்பு எடுத்தனர். மேலும், நிறுவனம் தொடர்புகொள்ள முடியாதபடி அவர்கள் தங்களது செல்போன்களையும் அணைத்துவைத்தனர்.
இதனால், 85 விமானங்களின் சேவைகளை ரத்து செய்யும் நிலைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தள்ளப்பட்டது. இந்த விமானப் பயணத்தை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையில், திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கடும் நடவடிக்கை எடுத்தது. சுமார் 25 பணியாளர்களை பணிநீக்கம் செய்து அந்த நிறுவனம் உத்தரவிட்டது. ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து வேலைநிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் நேற்று மாலை 4மணிக்குள் பணியில் சேர வேண்டும் எனவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் சார்பில் கெடு விதிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment