
கிருஷ்ணகிரி: உள்ளூரில் மகசூல் பாதிப்பால், காவேரிப்பட்டணம் மண்டிகளுக்கு வெளி மாநிலங்களில் இருந்து மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. வழக்கத்தைவிட மாங்காய்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், போச்சம்பள்ளி, சூளகிரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மாங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், மல்கோவா, செந்தூரா, இமாம் பசந்த், பெங்களூரா, மல்லிகா, பீத்தர், பங்கனப்பள்ளி உள்ளிட்ட, 40-க்கும் மேற்பட்ட மா ரகங்கள் விளைவிக்கப்படுகிறது. மழையின்மை, கடும் வெயிலால் ஏற்பட்டுள்ள வறட்சி உள்ளிட்ட காரணங்களால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா சாகுபடி சுமார் 80 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. இறவை சாகுபடியில் விளைந்த மாங்காய்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment