
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். குறிப்பாக கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தக்காளி, கத்தரிக்காய், வாழை, முள்ளங்கி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் வெண்டைக்காய் சாகுபடி அதிகரித்துள்ளது. இதனால் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment