
அரூர்: சித்தேரி மலைப்பகுதியில் போதிய மழையின்மையால் இந்த ஆண்டு சாமை விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மலைப் பகுதியில் உள்ள சித்தேரி ஊராட்சி 61 குக் கிராமங்களை உள்ளடக்கியது. சித்தேரி, சூரியகடை, ஏமத்தி, நெரிகாடு, நொச்சிகுட்டை, எருமகடை, கலசப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே மக்கள் உள்ளனர். சில கிராமங்களில் மட்டுமே கிணறு பாசனம் மூலம் நெல், வாழை, மலர் சாகுபடியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மற்ற இடங்களில் மானாவாரி பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment