
கிருஷ்ணகிரி: தொடர் மழை மற்றும் பூச்சித் தாக்குதலால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மல்லிகைப் பூ மகசூல் 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மைக் கொட்டாய், மலையாண்டஅள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் மல்லிகைப் பூ அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் பறிக்கப்பட்டு, சரக்கு வாகனங்கள் மூலம் உள்ளூர் மற்றும் ஓசூர், பெங்களூரு மலர் சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment