
சென்னை: ராயல் என்பீல்ட் நிறுவனம் அதன் புதிய ‘புல்லட் 350' மாடலை அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான மாடலாக புல்லட் இருந்து வருகிறது. இந்நிலையில், நவீன இன்ஜினில், புதிய வடிவமைப்பில் ‘புல்லட் 350' மாடலை அந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
2010-ம் ஆண்டுக்குப் பிறகு புல்லட் மாடலில் யுசி என்றழைக்கப்படும் யுனிட் கன்ஸ்ட்ரக்சன் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நவீன சூழலுக்கு ஏற்ப வாகனத்தின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில், புதிய புல்லட் மாடலில் ‘ஜே சீரிஸ்' இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment