
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்.சாண்ட் தயாரித்து விற்பனை செய்யும் சில நிறுவனங்கள் கழிவுகள் கலந்த எம்.சாண்டை விற்பனை செய்வதாகவும் இதனால் கட்டி டத்தின் உறுதித் தன்மை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மிகக் குறைந்த நிறுவனங்களே தரச்சான்று பெற்றுள்ளதால் மற்றவர்கள் விற்பனை செய்யும் எம்.சாண்ட்மண்ணை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சமூக ஆவலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு கள் ஓடுகின்றன. இந்த ஆறுகளில் இருந்து அள்ளப்படும் மணலே காஞ்சிபுரம், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்பட்டு வந்தன. இதற்காக அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகள் விதிகளை மீறி மணல் அள்ளியதால் ஆறுகள் சுரண்டப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment