
மும்பை: வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு இன்றுடன் (செப்.30) நிறைவடைகிறது. இந்நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்தச் சூழலில் சில நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் இறுதி வரை நீட்டிக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் சிலர் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதைக் கருத்தில் கொண்டு இந்த காலக்கெடு நீட்டிப்பது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் நேற்று ரிசர்வ் வங்கி, ரூ.2000 நோட்டுக்களை செப்.30-க்குள் மாற்றாவிட்டால் அது உங்களிடம் இன்னொரு தாளாக மட்டுமே இருக்கும் என்று கூறியது. இதன்மூலம் ரிசர்வ் வங்கி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment