
சிவகாசி: பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு உற்பத்திக்கு அனுமதி கோரிய பட்டாசு உற்பத்தியாளர்களின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சிவகாசியில் பட்டாசுத் தொழில் பாதிக்கப்படும் என உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு இந்தியா முழுவதிலும் தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது. மேலும் அதில் தீபாவளி அன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும், பகலில் பட்டாசு வெடிக்க கூடாது, பேரியம் நைட்ரேட் பயன்படுத்த கூடாது, சரவெடி உற்பத்தி செய்ய கூடாது, ஆன்லைனில் பட்டாசு விற்க கூடாது, குறைந்த மாசு உள்ள பசுமை பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment