
சென்னை: வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான அவகாசம் நாளையுடன் (செப். 30) நிறைவடைகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் (பங்க்), அரசு, ஆம்னி பேருந்துகளில் இன்று முதல் ரூ.2000 நோட்டுகள் வாங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் ரூ.2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நோட்டுகளை கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக அறிவித்தது. 2023 செப்.30-ம் தேதிக்கு பிறகு ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும், அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment