
கோவை: மின் கட்டண பிரச்சினை தொடர்பாக தமிழக அரசை வலியுறுத்த, 165 தொழில் அமைப்புகளை உள்ளடக்கிய புதிய அமைப்பு கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. முதல்வரை நேரில் சந்திக்கவும் இந்த அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து போராடுவதற்காக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 90 தொழில் அமைப்புகளை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு’ சமீபத்தில் கோவையில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் சில தினங்களுக்கு முன் காரணம் பேட்டையில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment