
கோவை: எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் உற்பத்தி துறையில் ஏற்பட உள்ள வாய்ப்புகளை சிறு தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, தமிழக அரசின் ‘எம்எஸ்எம்இ’ துறை செயலர் அருண்ராய் தெரிவித்தார்.
எம்எஸ்எம்இ தொழில்துறையின் ‘ஃபேம் தமிழ்நாடு’ பிரிவு மற்றும் உலக வளங்கள் நிறுவனம் (இந்தியா) சார்பில் தமிழகத்தை உலகளாவிய மின்சார வாகனங்கள் உற்பத்தி கேந்திரமாக மாற்ற உதவும் திறன் மேம்பாட்டு பயிலரங்கு கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நேற்று நடந்தது. குறு, சிறு, நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசின் ‘ஃபேம் தமிழ்நாடு’ பிரிவு மற்றும் உலக வளங்கள் நிறுவனம்(இந்தியா) இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கடந்தாண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment