
சென்னை: சென்னை உள்பட 8 பகுதிகளுடன் இந்தியச் சந்தையில் ஜியோ நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவையான ஜியோ ஏர்ஃபைபரை அறிமுகம் செய்துள்ளது. இதன் சந்தா விவரங்கள் குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் கடந்த 2016-ல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது ஜியோ டெலிகாம் சேவைகள். அதுவரை டாக்டைம், மெசேஜ், இன்டர்நெட் என மொபைல்போன் பயனர்கள் தனித்தனியே ரீசார்ஜ் செய்ய வேண்டி இருந்தது. இந்தச் சூழலில் இதை அனைத்தையும் ஒரே பிளானாக இணைத்து அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் இன்டர்நெட் என வழங்கியது ஜியோ. அதன் மூலம் இந்திய டெலிகாம் சந்தையில் புரட்சி ஏற்படுத்தியது. தற்போது ஏர்ஃபைபரை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment