
புதுடெல்லி: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று டெல்லியில் கூறியதாவது:
வரும் 2030-ம் ஆண்டுக்குள் நமது எரிசக்தி தேவையில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அல்லது புதைபடிவமற்ற எரிசக்தி ஆதாரங்களில் இருந்து பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பை மேம்படுத்துவதற்காக இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனியாரின் பேட்டரி எரிசக்தி சேமிப்பு திட்டங்களுக்கு ரூ.3,760 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment