
புதுடெல்லி: அடுத்த சில ஆண்டுகளில் ஜி20 நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பொருளாதார ரீதியாக உலகின் 5-வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு துறையின் வளர்ச்சி காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மேம்படும். படித்த இளைஞர்கள், நகர்மயமாக்கல் காரணமாக வீடு மற்றும் கார்களுக்கான தேவை அதிகரிக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment