
சென்னை: இந்தியாவின் பெருமைக்குரிய ஆயுர்வேத பிராண்டான “அம்ரித் நோனி”யை புகழ்ந்து பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அநேக மக்களின் பாராட்டுகளையும் குவித்து வருவதாக ஆயுர்வேத அம்ரித் நோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அம்ரித் நோனியின் முதன்மையான ஆயுர்வேத தயாரிப்பு 'அம்ரித் நோனி வலி நிவாரண ஸ்ப்ரே' ஆகும். இதுகுறித்து சமீபத்தில் சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதில் விரைவான வலி நிவாரணி என்று வரும்போது, அம்ரித் நோனி வலி நிவாரண ஸ்ப்ரேயை நான் நம்புகிறேன். இதன் பழமையான ஆயுர்வேத சூத்திரம் மற்றும் வளமான மூலிகைச் சாறுகள் அனைத்து வகையான வலிகளிலிருந்தும் விரைவாக நிவாரணம் அளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment